Sunday 19th of May 2024 02:05:12 PM GMT

LANGUAGE - TAMIL
யாழில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவரின் கிராமத்திற்கு;  தொற்று நீக்கும் பணி ஆரம்பம்!

யாழில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவரின் கிராமத்திற்கு; தொற்று நீக்கும் பணி ஆரம்பம்!


யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் தாவடிக் கிராமத்தில் தொற்றுக் கிருமி நீக்கி விசிறும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட புதிய இயந்திரத் தொகுதியால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள தாவடிக் கிராமத்தில் வசிப்போர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.


Category: உள்ளூர, பகுப்பு
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE